விரைவில் தனியார் வகுப்புக்களும் ஆரம்பம்

விரைவில் தனியார் வகுப்புக்களும் ஆரம்பம்

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், தனியார் கல்வி வகுப்புகளை மீண்டும் தொடங்க திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர, உடனடியாக கடுமையான சுகாதார நெறிமுறைகளின் கீழ் தனியார் கல்வி வகுப்புகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று உறுதிப்படுத்தினார்.