கொவிட்-19 தொற்று காரணமாக நால்வர் உயிாிழப்பு!

கொவிட்-19 தொற்று காரணமாக நால்வர் உயிாிழப்பு!

நாட்டில் மேலும் நான்கு கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகின.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்துள்ளது.

ஆலயடிவேம்பு பகுதியை சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கொவிட்-19 ஆல் ஏற்பட்ட நியூமோனியா நோய் நிலைமை காரணமாக அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 91 வயதான பெண்ணொருவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணித்தார்.

குருதி விசமானமை மற்றும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நியூமோனியா நோய் நிலைமை அவரது மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அகலவத்தை பகுதியை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் மரணித்தார்.

களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அவர் கட்ந்த 31 ஆம் திகதி உயிரிழந்தார்.

நுரையீரல் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தர்கா நகர் பகுதியை சேர்ந்த 63 வயதாக ஆண் ஒருவர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுடன் குருதி விசமடைந்தமை மற்றும் மாரடைப்பு காரணமாக அவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது