இம்மாதம் நடுப்பகுதி முதல் விமான நிலையம் மீள் திறப்பு!

இம்மாதம் நடுப்பகுதி முதல் விமான நிலையம் மீள் திறப்பு!

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த மாதம் நடுப்பகுதி முதல் விமான நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் திறக்கப்படவுள்ள குறிப்பான தினம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.