கல்முனையில் இராணுவத்தினரின் துணையுடன் இரவு இரவாக கொரோனா பரிசோதனை!
கல்முனை மாநகர எல்லைப்பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எழுமாற்றாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அதிகமானோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காகவும் பொது இடங்களில் இராணுவத்தினரின் துணையுடன் சுகாதார பிரிவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று இரவு பெற்றோலிய நிலையங்களில் தற்காலிக சிகிச்சை கூடம் ஏற்படுத்தப்பட்டு குறித்த பரிசோதனைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.