இரு வாகனங்களுக்கிடையில் சிக்குண்ட கடற்படை சாரதி..!
பூசா கடற்படை முகாமில் கடற்படை சாரதி ஒருவர் இரு வாகனங்களுக்கிடையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
வாகனம் ஒன்றை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகொடை கெப்பட்டியகொட பகுதியை சேர்ந்த 39 வயதுடைய கடற்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.