
தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவக பிரிவுகள்..!
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளில் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கவிக்கப்படவுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய டேம்வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மரதானை காவல்துறை அதிகார பிரிவுகள் நாளை காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன
அத்துடன் கொம்பனிவீதி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வேகந்த மற்றும் ஹூனுப்பிட்டிய கிராமசேகவர் பிரிவுகளும் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
மேலும் வெள்ளவத்தை காவல்துறை அதிகாரபிரிவுக்குட்பட்ட மயூரா பிரதேசம், பொரளை காவல்துறை அதிகாரபிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த, காளிபுள்ளவத்தை மற்றும் வெல்லப்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட லக்சந்த செவன என்பனவும் நாளை காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும் வாழைத்தோட்டம் காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தபடவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் கொடக்கவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மின்னன, விலேகொட, யகுடாகொட, அஸ்கஹகுல வடக்கு, போபெத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் உடன்அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கொடக்கவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இறக்குவானை நகரம், இறக்குவானை வடக்கு, இறக்குவானை தெற்கு, மஸ்சிம்புல மற்றும் கொட்டல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன