வடமாகாணத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம்!

வடமாகாணத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம்!

வவுனியாவை சேர்ந்த வயோதிப பெண் கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்தார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண்மணி இன்றையதினம் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.