இலங்கையில் 2 ஆயித்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் 2 ஆயித்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,001ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

புதிதாக 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறித்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி 428 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

மேலும் இலங்கையில் கொவிட் 19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1562ஆக காணப்படுகிறது.