அதியுச்ச நடவடிக்கை எடுக்கப்படும்! பாதுகாப்புச் செயலர் எச்சரிக்கை

அதியுச்ச நடவடிக்கை எடுக்கப்படும்! பாதுகாப்புச் செயலர் எச்சரிக்கை

பாதாள உலக நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன எச்சரித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் மேலும் பலப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் - ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் பதிலளித்த அவர்,

பொது மக்களால் இரகசியமாக தெரிவிக்கப்பட்டு வரும் தகவல் மூலமாக சட்டவிரோத போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவதனால் சமீபத்தில் போதைப் பொருட்களின் இருப்பு குறைந்து வருகின்றது.

இதன் காரணமாக அவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதாள உலக மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் ஒரே குழுக்களினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் மூலம் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 59 மில்லியன் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும், நாம் கடந்த காலங்களில் பாதாள உலக மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு எதிராக தொடங்கிய போராட்டத்தை நிறுத்தவில்லை என்றார்.