சிறைச்சாலை மோதல்களை கட்டுப்படுத்த விசேட பிரிவு

சிறைச்சாலை மோதல்களை கட்டுப்படுத்த விசேட பிரிவு

சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் இலங்கை இராணுவத்தில் 12 வருட கால சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்ற 500 பேரை இந்த பிரிவில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.