கட்டுநாயக்காவில் தரையிறங்கவுள்ள விமானங்கள் தொடர்பில் வெளியான செய்தி

கட்டுநாயக்காவில் தரையிறங்கவுள்ள விமானங்கள் தொடர்பில் வெளியான செய்தி

எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் விமான தரையிறக்கல் கட்டணங்களை தற்காலிமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரை, இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள மற்றும் இரத்மலானை ஆகிய சர்வதேச விமான நிலையங்களை, எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச விமான நிறுவனங்களினால் மேற்கொள்ளவுள்ள விமானப் பயண நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே, அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

குறித்த யோசனையை, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சரவையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.