கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை..!

கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை..!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

பண்டிகைக்காலத்தில் கொவிட் 19 நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக இருக்கிறது.

எனவே ஒன்று கூடுவது, உறவினர்களுடன் வீடுகளுக்கு செல்வது, விருந்துபசாரங்கள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கூடுமானவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.