பண்டிகைக்கால சுற்றிவளைப்புகள் தொடரும்..!
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற காவல்துறை போக்குவரத்து சுற்றிவளைப்புகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரையில் தொடரும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் முதல் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக 9 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இந்த சுற்றிவளைப்புகளில் இதுவரையில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த தினத்தில் ஏற்பட்ட 60 விபத்துக்களில் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த விபத்துக்களில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.