
பிலியந்தலையில் விபத்து - இருவர் பலி
பிலியந்தலை - ஜாலியகொடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தந்தையும் நான்கு வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளனர் என்பதோடு தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வீதியோரத்தில் காணப்பட்ட பூந்தொட்டியில் மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.