ஸ்ரீலங்காவில் அரச ஊழியர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

ஸ்ரீலங்காவில் அரச ஊழியர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

திறைசேரியில் நிலவும் நிதிப்பற்றாக்குறையினால் மாகாண சபைகளுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களால், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியில் சுகாதார ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக நேர கொடுப்பனவின் மொத்த தொகையை அறிவிக்குமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை அறிக்கைகள் கிடைத்தவுடன் திறைசேரியிடமிருந்து நிதியை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.