கொரோனா நோயாளியின் வெற்றிலை துப்பலால் வந்த விபரீதம் - தனிமைப்படுத்தப்பட்டனர் பலர்

கொரோனா நோயாளியின் வெற்றிலை துப்பலால் வந்த விபரீதம் - தனிமைப்படுத்தப்பட்டனர் பலர்

கொரோனா நோயாளி ஒருவர் வெற்றிலையை மென்று அதனை துப்பிய நிலையில் அந்த எச்சில் பட்ட இருவர் உட்பட அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோனா நோயாளியாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கொழும்பிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் சிலர் அண்மையில் விசேட பஸ் மூலம் பலங்கொடை சமனலவெவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது பலாங்கொடை கல்தொட்டை, மிரிஸ்வத்த பகுதியில் வைத்து அந்த பஸ்ஸின் ஜன்னலைத் திறந்த கொரோனா தொற்றுடைய பெண் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியுள்ளார்.

இதன்போது பஸ் அருகே பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது இந்த வெற்றிலை எச்சில் மழையாக பட்டதை அடுத்து பொதுசுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று தற்சமயம் வீடுகளில் அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.