கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமயான விபரங்கள்..!

கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமயான விபரங்கள்..!

இலங்கையில் மேலும் ஐந்து கொவிட்19 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.

பனாகொடை பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் குருதி விசமானமை, கொவிட் 19 தொற்றுடனான நியூமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு - 8 பகுதியை சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவர் கடந்த 17 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்றுடனான நியுமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு - 12 பகுதியை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்19 கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் குருதி விசமானமை நியூமோனியா மற்றும் புற்றுநோய் என்பனவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொழும்பு -2 பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெலிசறை சுவாச தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் -19 ஆல் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டாரகம பகுதியை சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவர் நேற்று முன்தினம் ஹொரனை ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

உயர் குருதி அழுத்தம் மற்றும் கொவிட் -19 தொற்றினால் ஏற்பட்ட மார்பு நோய் நிலை என்பன அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.