தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்...!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்...!

இன்று காலை ஐந்து மணியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் சில விடுவிக்கப்பட்டிருப்பதுடன், புதிதாக சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்19 தடுப்பு செயற்பாட்டு மையம் நேற்று இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டது.

இதற்கமைய பேலியகொடை கங்கபட கிராம சேவகர் பிரிவின் நெல்லிகஹவத்தை மற்றும் பூரணகொட்டுவத்த பகுதிகள் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, கிரிபத்கொட - விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஸ்ரீஜயந்தி மாவத்தையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில இடங்கள் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வெள்ளவத்தை - கோகிலா வீதி, வெல்லம்பிட்டி சாலமுல்ல கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

வத்தளை - கெரவலப்பிட்டிய கிராம சேவகர் பிரிவின் நைதுவ பிரதேசம், பேலியகொடை கங்கபட கிராம சேவகர் பிரிவு, கிரிபத்கொட விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், கொழும்பின் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம்வீதி, வாழைத்தோட்டம், தெமடகொடை, மாளிகாவத்தை, மருதானை ஆகிய காவற்துறை அதிகாரப் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதுதவிர, கொம்பனித்தெருவின் வேகந்த கிராமசேவகர் பிரிவும், பொரளையில் உள்ள வனாத்தமுல்லை கிராமசேவகர் பிரிவும், வெல்லம்பிட்டி - லக்சந்த செவன வீட்டுத்திட்டம் என்பனவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மட்டக்குளி காவற்துறை அதிகார பிரிவின் பேர்கசன் பாதை தெற்கு பகுதி, கொம்பனித்தெரு காவற்துறை அதிகார பிரிவின் ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

கறுவாத்தோட்டம் - 60 ஆம் தோட்டம், வெள்ளவத்தை காவற்துறை அதிகார பிரிவின் மயுரா பிரதேசம் மற்றும் நஃபீர்வத்தை ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்

அத்துடன் மிரிஹான காவற்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட தமிழ்நாடு பகுதி தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

வத்தளை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட துவே வத்த பகுதி இன்று அதிகாலை ஐந்து மணி முதல் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பேலியாகொடவத்த, மீகஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள ரோஹனவிஹார மாவத்தை பகுதியும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும்.

கிரிபத்கொடை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட ஹூனுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவின் வெதிகந்த பகுதியிலும் தனிமைப்படுத்தல் தொடரும்.

நிட்டம்புவ காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட திஹாரி வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வாரன பன்சல வீதி, கத்தோட வீதி மற்றும் இந்ரா மாவத்தை பகுதிகளும் இன்று அதிகாலை 5 மணிமுதல் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

வெயாங்கொடை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட ஹிரிப்பிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவின் சுதந்திர மாவத்தை, பூகொடை காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட குமாரிமுல்ல கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை அல்லாத நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் மறு அறிவித்தல் வரையில் அவ்வாறே பேணப்படும் என்றும் கொவிட்19 தடுப்பு செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.