16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நேற்று முன்னெடுப்பு !
கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் நேற்று மட்டும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, 16 ஆயிரத்து 542 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 10 இலட்சத்து 86 ஆயிரத்து 62 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியை அதிக எண்ணிக்கையிலான அதாவது 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.