கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் பலி...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் பலி...!

கொவிட் 19 நோய் காரணமாக மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் கொவிட் 19 நோயால் மரணித்தோரின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.

சிலாபத்தில் 72 வயதான ஆண் ஒருவரும், மக்கொனையில் 86 வயதான பெண் ஒருவரும், கொழும்பு 15ல் 76 வயதான ஆண் ஒருவரும், மஹரகமயில் 50 வயதான ஆண் ஒருவரும் வத்துபிட்டிவல பகுதியில் 86 வயதான ஆண் ஒருவரும் கொவிட் நோயால் மரணித்ததாக, தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.