
பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!
நாவல - சேனாநாயக்க மாவத்தையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.