நாட்டில் இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 701 பேர் வீடுகளுக்குத் திரும்பிய நிலையில் இதுவரை 26 ஆயிரத்து 353 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் 8 ஆயிரத்து 874 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 160 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.