சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 63 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணபட்டுள்ளவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் 56 ஆண் கைதிகளும் 4 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.

மேலும் சிறைச்சாலைகளில் இதுவரை 3279 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதோடு 1189 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.