சற்றுமுன்னர் மேலும் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

சற்றுமுன்னர் மேலும் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1980 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

புதிதாக 29 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதுவரையில் 421 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு குறித்த கொரோனா தொற்றிலிருந்து மொத்தமாக 1548 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.