சற்று முன்னர் கொரோனாவால் மேலும் 3 பேர் பலி..!
கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 3 பேர் மரணித்துள்ளனர்.
78 வயதுடைய ஆண் ஒருவரும் 50 மற்றும் 43 வயதுகளையுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.