அதிகரிக்கும் கொரோனா; நாடு மீண்டும் முடக்கப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
நத்தார் பண்டிகை நாட்களிலும், வருட இறுதியிலும் நாட்டை முடக்கம் செய்வதா அல்லது பகுதியளவில் மூடுவதா என்பது குறித்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் இன்று மாலை கூறினார்.
மேலும் குறிப்பாக வருகின்ற 7 நாட்கள் நாட்டிற்கு மிகவும் தீர்க்கமானதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் இன்று மேலும் 326 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.