விமான விபத்து தொடர்பில் ஆராய குழுவொன்று நியமனம்..!
கந்தளாய் சூரியபுரவில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் ஆராய விமானப்படை தளபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் - சூரியபுரயில் இன்று விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் பயிற்சி பெறும் விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் இன்று சூரியபுர - ஜனரஞ்சன வாவியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த விமானி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்தநிலையில் இருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ருவென்வல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதான விமானி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விமானப்படைத் தளபதியால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.