கித்துல் பயிரை பிரதான பெருந்தோட்டப் பயிராக பெயரிடுவதற்கு அமைச்சரவை தீர்மானம்!
இலங்கையில் கித்துல் பயிரை பிரதான பெருந்தோட்டப் பயிராக பெயரிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன் கித்துல் அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமகால மைய கித்துல் உற்பத்திக் கைத்தொழில் இலங்கையின் தனித்துவமான கைத்தொழிலாகவும் அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடிய கைத்தொழிலாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் மக்கள் பொருளாதாரத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கித்துல் செய்கைக் கைத்தொழிலை விரிவுபடுத்துதல் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, கித்துல் பயிரை பிரதான பெருந்தோட்டப் பயிராக பெயரிடல் மற்றும் கித்துல் அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கும், பெருந்தோட்ட அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.