சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - கணவர் ஹேம்நாத் கைது

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - கணவர் ஹேம்நாத் கைது

பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர்.

 

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது.

 

இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது.

 

சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.

இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

 

சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் தொடங்கியுள்ளது.  

 

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.