இலங்கையில் தேங்காயின் விலையில் பாரிய மாற்றம்

இலங்கையில் தேங்காயின் விலையில் பாரிய மாற்றம்

இலங்கையில் தேங்காயின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சமகாலத்தில் தேங்காய்களின் எண்ணிக்கையில் மிகவும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அணில்கள் மற்றும் குரங்குகளினால் தென்னம் பயிர்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாட்களில் அரசாங்கத்தினால் தேங்காய்களுக்கு நிர்ணய விலை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட போதிலும் தற்போது அவை செயற்படுத்துவதில்லை என கூறப்படுகின்றது.