
நேற்றைய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் பதிவு!
நேற்றைய தினம் (13) நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 655 ஆக அதிகாித்துள்ளதோடு இவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
நேற்று கொழும்பு மாவட்டத்தில் பதிவானோாின் மொத்த எண்ணிக்கை 444 ஆகும்.
இதற்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தில் 75 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 41 பேரும் இவ்வாறு பதிவாகியுள்ளனர்.
ஏனைய 90 பேரும் வெவ்வேறு மாவட்டங்களில் பதிவாகியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.