இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 655 பேருக்கு கொரோனா தொற்று..!

இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 655 பேருக்கு கொரோனா தொற்று..!

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 655 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 790 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட, 503 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியிலும் 147 பேர் சிறைச்சாலை கொத்தணியிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 4 பேருக்கும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 152 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 8 ஆயிரத்து 845 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதோடு,  நேற்றைய தினம் 489 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 23,793 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.