மணமகனுக்கு கொரோனா -தனிமைப்படுத்தப்பட்டது பிரதேசம்

மணமகனுக்கு கொரோனா -தனிமைப்படுத்தப்பட்டது பிரதேசம்

மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இரத்தினபுரி உக்வத்தை பகுதியிலுள்ள 10 வீடுகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், திருமண நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொடகவெல சுகாதார வைத்திய அதிகாரி இந்திகா குணதாஸ தெரிவித்துள்ளார்.

சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக, நால்வருக்கு நேற்றைய தினம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், இறக்குவானை – உக்வத்தை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருமண பந்தத்தில் இணைந்த மணமகள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.