தோட்ட அபிவிருத்தி சபையின் அனைத்து பணியாளர்களுக்கும் சட்டரீதியாக காணிகளை வழங்கும் திட்டம்..!
காணி உரிமையற்ற மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் அனைத்து பணியாளர்களுக்கும் 3 மாதங்களினுள் சட்டரீதியாக காணிகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவால் உரிய அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணியாளர்களுக்கும் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 7 பேச்சஸ் காணியினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.