விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனு...!

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனு...!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 4 மாவட்டங்களில் போட்டியிடுவதாக  வணக்கத்துக்குறிய அத்துரெலிய ரத்ன தேரர் மற்றும் சேனா அமைப்பின் பொது செயலாளர் வணக்கத்துக்குறிய கலகொட ஞானசார தேரர்களால் முன்வைக்கப்பட்ட வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஏ.எச்.எம்.கே நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா அகியோர் தலைமையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வணக்கத்துக்குறிய அத்துரெலிய ரத்ன தேரர் மற்றும் சேனா அமைப்பின் பொது செயலாளர் வணக்கத்துக்குறிய கலகொட ஞானசார தேரரினால் கொழும்பு,களுத்துறை,குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ததாகவும் இவற்றை மாவட்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாகவும் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.