கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்- தொற்று நோய் விஞ்ஞான பிரிவு

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்- தொற்று நோய் விஞ்ஞான பிரிவு

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில மாவட்டங்களில் நோயாளர்கள் பதிவாகும் போது நாளாந்தாம் தாங்கள், 10,000 முதல் 13,000 வரையிலான பி.சி.ஆர் பரிசோதனைகளை அப்பகுதிகளில் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் பெருமளவானோர் குறித்த மாவட்டங்களில் எழுமாறாக தெரிவு செய்யப்படுபவர்களாவர்.

இந்த பரிசோதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்களவான நோயாளர்களே கண்டறியப்படுகின்றனர்.

பின்னர அவர்களின் தகவல்களை ஆராயும்போது, தற்போதைய கொத்தணிகளுடன் பெரும்பாலானோருக்கு தொடர்புள்ளமை தெரியவருகிறது.

எனவே, தற்போது கொவிட் பரவல் நிலை ஓரளவு கட்டுப்பாட்டு நிலையில் உள்ளது.

கொவிட் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அரசாங்கத்தின் ஊடாக ஏதாவது தலையீடு அவசியமாகும் என்பதுடன் அதற்கு சமாந்தரமாக பொதுமக்களின் தலையீடு அவசியமாகும் என்றும் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது வரையில் கொரோனா வைரஸூக்காக பொதுவான தடுப்பூசி ஒன்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறியக்ககூடியதாக உள்ளது.

எனினும், உலகில் தற்போது வரையில் பொதுவாக தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் எந்தவொரு தடுப்பூசியும் ஏதாவது ஒரு வகையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்துடன், அங்கீகரிக்கப்படவில்லை என்பதுடன், தற்போதும் சில தடுப்பூசிகள் பரிசோதனை மட்டத்தலேயே உள்ளன.

அந்த ஆய்வுகள் வெகுவிரைவில் நிறைவடைந்து விரைவில் அது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டின் நடுப்பகுதி அளவில, பொது பயன்பாட்டுக்காக ஏதாவது ஒரு தடுப்பூசி தயாராகும் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தினதும், தங்களினதும் மதிப்பீடாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரச ஆயுர்வேத அதிகாரிகள் சங்கம் கொழும்பில் நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

இதன்போது கருத்து தெரிவித்த பொது சுகாதார வைத்திய அதிகாரி, ஆயுர்வேத வைத்தியர் சேனக கமகே, முதலாவது கொரோனா அலையின்போது, விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதன்போது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விசேட மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

அபாயமிக்க தரப்பினருக்கு அந்த நோய்எதிர்ப்பு சக்தி மருத்து மருந்து வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தது

எனவே, இது சிறந்த மருந்தாகும் என்பது உறுதியாவாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேநேரம், அண்மையில் ஒருவர் மருந்து ஒன்றை கண்டறிந்ததுடன், அது ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது

ஒரேயொரு மருந்து இது என்றில்லாவிட்டாலும், ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரேயொரு உள்நாட்டு மருந்து இதுவாகும்.

எனவே, இது போன்ற மேலும் சில மருந்துகள் உள்ளதாகவும், அவற்றுக்கு முறையான ஆய்வுகூட பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்

இதனூடாக மிகக் குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்துமாறு பொது சுகாதார வைத்திய அதிகாரி, ஆயுர்வேத வைத்தியர் சேனக கமகே தெரிவித்துள்ளார்.