புரெவி சூறாவளியின் தற்போதைய நிலை...!

புரெவி சூறாவளியின் தற்போதைய நிலை...!

புரெவி சூறாவளி இலங்கையில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது.

இதனால் அதன் பாதிப்பு குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாளை வரையில் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடற்றொழில் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை புரெவி சூறாவளியை அடுத்து ஆறு மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் 6 மாவட்டங்களில் 3,575 குடும்பங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார் எனவும் 15 வீடுகள் முழுமையாகவும், 192 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.