இலங்கை நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளராகவும் பணிக்குழுவின் பிரதானியாகவும் குஷானி ரோஹனதீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்..!
இலங்கை நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளராகவும் பணிக்குழுவின் பிரதானியாகவும் குஷானி ரோஹனதீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உதவி செயலாளராக பணியாற்றியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் அவர் பிரதி பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.
முன்னாள் பிரதி பொதுச் செயலாளர் நீல்இத்தவெல மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே குஷானி ரோஹனதீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.