
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள்..!
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 541 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 294 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் வெலிகட சிறைச்சாலையிலுள்ள 66 பேருக்கு நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் நேற்று 130 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 96 பேர் அட்டுலுகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுதவிர கண்டி மாவட்டத்திலும் நேற்று 36 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.