தோண்டியெடுக்கப்பட்ட சிசுவின் உடம்பில் எட்டு இடங்களில் கத்திக்குத்து! பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ள தகவல்

தோண்டியெடுக்கப்பட்ட சிசுவின் உடம்பில் எட்டு இடங்களில் கத்திக்குத்து! பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ள தகவல்

நோர்வுட் - ஜனபதய பகுதியில் தோண்டியெடுக்கப்பட்ட சிசு கத்தியால் குத்தி கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையிலிருந்து தெரியவந்துள்ளது.

தோண்டியெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் இநோக்கா ரத்நாயக்க தலைமையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது சிசுவின் உடற் பகுதியில் எட்டு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பின்னர் சிசுவின் சடலம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நோர்வுட் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஊடாக குறித்த சிசு புதைக்கப்பட்ட பகுதி அடையாளம் காணப்பட்டது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான், சட்டவைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவானின் உத்தரவிற்கு அமைய சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.