
ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நால்வரிடம் வாக்குமூலம் பெற்ற மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு
மன்னாரில் கடந்த 25 ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட 4 பேரிடம் இன்றைய தினம் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
மிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் மற்றும் பிரேம் குமார், ஆகியோரிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்களை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றத்தினூடாக மன்னார் காவல்துறையினர் தடை உத்தரவை பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி குறித்த நபர்களின் விசேட ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.