இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச பேருந்து சேவைகள்

இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச பேருந்து சேவைகள்

இன்று முதல் அரச பேருந்து சேவைகள் வழமைப் போல இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தூரப்பிரதேசங்களுக்கான பேருந்து சேவை கடந்த காலங்களில் பாரிய அளவில் குறைக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில், அந்த அச்சத்தை போக்கும் வகையில் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடமைகளுக்கு செல்கின்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், போதிய அளவான பேருந்து சேவைகளை நடத்துமாறு, விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சுர் திலும் அமுனுகம, உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் தற்போது மேல் மாகாணத்தை தவிர, ஏனைய பகுதிகளில் தனியார் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அலுவலக தொடருந்து சேவைகள் உட்பட கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு பிரவேசிக்கும் மற்றும் அங்கிருந்து புறப்படுகின்ற 104 தொடருந்து சேவைகள் இன்று இடம்பெறவுள்ளன..

தொடருந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள தொடருந்து நிலையங்களிலும் இன்று முதல் தொடருந்துகள் நிறுத்தப்படும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.