சற்றுமுன்னர் ஜனாதிபதி பொதுமக்களுக்கு வழங்கியுள்ள சலுகை..!

சற்றுமுன்னர் ஜனாதிபதி பொதுமக்களுக்கு வழங்கியுள்ள சலுகை..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சரவை குறித்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.