![](https://yarlosai.com/storage/app/news/e0c9cd2f9df1ea8365b68d1f4d603a48.jpg)
ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள மக்களுக்கான சேவை!
நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதுதொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவே பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவுள்ளது.
இதனை தவிர குழுவின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக மேலதிகமாக 02 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை ஆணையாளர் நாயகம், சட்டத்தணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் இது குறித்த யோசனைகள், கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை இலங்கை மத்திய வங்கி, கொழும்பு – 1 எனும் முகவரிக்கும் அனுப்ப முடியும்.
பொதுமக்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கான மின்னஞ்சல் முகவரியொன்றையும் தொலைபேசி இலக்கமொன்றையும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.