பஸிலுக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

பஸிலுக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

அடுத்த அமைச்சரவை திருத்தத்தின் போது முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதற்கான சாத்தியம் உள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத்தர வேண்டும் என்ற ஆவணத்தில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களே கையெழுத்து திரட்டியதாகவும், தாமும் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரத்தில் உள்ள கட்சியொன்றை தோற்கடித்து, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொண்டு, ஜனாதிபதியொருவரையும் அந்த கட்சியிலிருந்து தெரிவு செய்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற நிழலாக இருந்து செயற்பட்டவரே பஷில் ராஜபக்ஷ எனவும் அவர் கூறினார்.

பஷில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமே கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு பஷில் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தால் புத்தெழுச்சி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பொறுப்பே அவருக்கு கிடைக்க வேண்டும் என அவர் கூறினார்