தாயாரை கொலை செய்த மகன்
மஹியங்கனை - தபான பிரதேசத்தில் தாயாரை மகன் தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார். இன்று அதிகாலை பொழுது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட நபர் மனநல கோளாறுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில், சகோதரர் தற்போது மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய தாயாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026