கொவிட்-19: பிரேஸிலில் ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது!

கொவிட்-19: பிரேஸிலில் ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில், ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதன்படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றுக்கு 27,312பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,269பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய பிரேஸிலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.

பிரேஸிலில் ஒட்டுமொத்தமாக 583,980பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 32,547பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 285,301பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 266,132பேர் பூரண குணமடைந்துள்ளனர். 8,318பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.