
பிரான்சிடம் இருந்து விடுதலைப் பெற்றதாக லெபனான் அறிவித்தது (நவ.26- 1941)
பிரான்சிடமிருந்து விடுதலைப்பெற்றதாக லெபனான் ஒருதலைப் பட்சமாக பிரகடனப் படுத்தியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1842- நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1922- எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவரின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே. 1941- இரண்டாம் உலகப் போர்: ஆறு ஜப்பானிய விமானங்கள் தொலைத்தொடர்புகள் அற்ற நிலையில் ஜப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து
பிரான்சிடமிருந்து விடுதலைப்பெற்றதாக லெபனான் ஒருதலைப் பட்சமாக பிரகடனப் படுத்தியது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1842- நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1922- எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவரின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே. 1941- இரண்டாம் உலகப் போர்: ஆறு ஜப்பானிய விமானங்கள் தொலைத்தொடர்புகள் அற்ற நிலையில் ஜப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
1942- நார்வேயைச் சேர்ந்த 572 யூதர்கள் ஜெர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர். 1950- மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர். 1957- சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார். 1965- சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.
1983- லண்டன் ஹீத்ரோ விமான நிலைய லக்கேஜ் பாதுகாப்பு அறையில் இருந்து 26 மில்லியன் டாலர் மதிப்பாலான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன. 2001- நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார். 2002- இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.