நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கத் தொடங்கியது

நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கத் தொடங்கியது

அதிதீவிர புயலாக நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியது.

 

புயல் காற்று

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.

 

முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.