உதவி பெண் அதிகாரியை தாக்கிய முகாமையாளருக்கு பிணை

உதவி பெண் அதிகாரியை தாக்கிய முகாமையாளருக்கு பிணை

மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல காரியாலயத்தின் முகாமைத்துவ உதவி பெண் அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அதன் முகாமையாளருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குறித்த நபர் இன்று (25) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.